வாழ்வு - 9:
அபி தியாவிடம் பேச வேண்டும் என்றதும் அனைவரும் அவன் ஏதாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவானோ என்று உள்ளுக்குள் பயந்தனர்..
சதா சந்தியாவிடம் உன் அறைக்கு அழைச்சிட்டுப் போய் பேசிட்டு வாடா சந்தியா..என்றதும் சந்தியாவிடம் இருந்த ஹர்ஷியை வாங்கிக் கொண்டார் சந்திரா..
அவரிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு வாங்க.. என்று அபியைத் தன் அறைக்கு அழைத்து சென்றாள்.உள்ளே சென்றதும் அவன் கதவை லாக் பண்ண எதுக்கு கதவை சாத்துறீங்க என்று படப்படப்புடன் கேட்டாள்..
கொஞ்சம் உன்கிட்ட பேசனும் பேபி என்றவன் அவள் அறையை பார்த்தான்..
ஏது நீ பேசப்போறியா நம்பிட்டோம்டா கதவு திறந்து இருந்தாலே சாக்லேட்ட அவள் வாய் வழிய சாப்பிட்ட.. இப்போ கதவை மூடி என்ன பண்ணப் போறியோ..
சுவற்றில் அர்ஜூன் புகைப்படம் மாட்டியிருந்தது.. அவளிடம் அர்ஜூன் ரொம்ப நல்லவன் பேபி என்றவன் ஆனால் இவ்ளோ நல்லவன்னு இப்போதான் தெரியும்…என்று மனதுக்குள் கூறிக் கொண்டான்.
ஆமாம் அஜி அத்தான் ரொம்ப ரொம்ப நல்லவங்க எனக்கு எல்லாமே அவங்கதான் என்று கூறியவள் தான் பேசியது அபத்தம் என்று அவருக்கே தோண ஐயோ இவர் கிட்ட போய் இப்படி சொல்றோமே என்று சங்கடப்பட்டவள் அவனை பார்த்தாள்..
அவனோ அவளை நோக்கி வந்தவன் ம்ம் நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன் என்னை மாமான்னு கூப்பிடுன்னு..சீக்கிரம் ட்ரைப்பண்ணு பேபி இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்.. உடனே கூப்பிட முடியாதுதான் ஆனால் எனக்காக கொஞ்சம் சீக்கிரம் ட்ரைப் பண்ணு..
அப்புறம் உன் அஜி அத்தான் உனக்கு யாரு உன் மனசுல அவனோட இடம் என்ன என்று எனக்கு தெரியும் அதனால் நீ தாராளமா தயங்காம என்கிட்ட அவனை பற்றி பேசலாம் சரியா.. பட் வெளிய மத்தவங்ககிட்ட பேசக்கூடாது..அவங்களுக்கு எதுவும் தெரியாது சரியா..என்றதும் அவன் சொன்னது புரியவில்லை என்றாலும் தலையை ஆட்டினாள்..
இங்க வந்து உட்காரேன் என்று மெத்தையில் அமர்ந்து அவளையும் அழைத்தான்..அவன் அருகில் வந்தவள் இல்லை நான் நிற்கிறேன் என்ன பேசணும் சொல்லுங்க என்றதும் அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தினான்..
அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து தான் வாங்கி வந்த சாக்லேட்ஸை அவளிடம் எடுத்துக் கொடுத்தான்..அவள் அவனை ஆச்சரியமாக பார்க்கவும் உனக்கு பிடிக்கும்னு சொன்னல்ல அதான் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினான்..
இவ்வளவும் எனக்கா என்று கேட்டாள் இதை வாங்கத்தான் கடைக்குப் போனீங்களா என்றதும் "ம்ம்" என்றான்.அவள் கையை எடுத்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன் பேபி என்னோட பழைய லைப் பற்றி உனக்கே தெரியும் தாத்தா சொல்லிருப்பாங்க என்று அவள் முகத்தைப் பார்க்கவும் ம்ம் என்று தலையை ஆட்டினாள்..
அவள் போனப்பிறகு நான் ரொம்ப கஷ்டப் பட்டேன் பேபி ஹர்ஷிய வச்சிக்கிட்டு என்னால் ஒன்னும் பண்ண முடியலை.. ஹர்ஷி பாலுக்கு அழும் போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும்.. ஐயோ என் பிள்ளை இப்படி அழுகுதேன்னு ரொம்ப வேதனையா இருக்கும்..
நான் எத்தனை இரவு அழுதுருக்கேன் தெரியுமா பேபி என்று கண் கலங்க கூறினான்..அவளுக்கும் கண் கலங்க அவன் கையைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினாள்..
வீட்டுல என்னை கல்யாணம் பண்ண சொல்லி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.. ஆனால் என்னால முடியலை..கல்யாணம் என்றாலே வெறுப்பு தான் வந்துச்சு.
இன்னொரு காரணம் நான் அப்போ இருந்த மனநிலைக்கு யாரையும் நம்ப முடியலை.. எனக்கு என் மேலேயே வெறுப்பு வந்துச்சு..
எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம் என்று நினைச்சேன் பேபி..
அப்புறம் நேற்று தாத்தா வந்து பேசினாங்க பேபி.. உனக்கு மனைவி வேண்டாம் அதெல்லாம் சரிதான் ஆனால் ஹர்ஷிக்கு அம்மா வேணும் என்று சொன்னார்..
நானும் அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்..அவங்ககிட்ட அப்போ வரப்போற பொண்ணு ஹர்ஷிக்கு மட்டும் அம்மாவா இருந்தா போதும் என்று வீட்டுல சொன்னேன்..
அப்புறம் இன்னைக்கு காலையில் கூட தாத்தா இங்க வர சொன்னப்ப ஆர்வமே இல்லாமதான் வந்தேன் பேபி ஆனால் ஹர்ஷிக்குட்டி உன் நெஞ்சில சாஞ்சிக்கிட்ட நீங்க ரெண்டு பேரும் ஏதோ சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தப்போ நான் எப்படி உணர்ந்தேன்னு எனக்கே சொல்ல தெரியலை பேபி…
நீங்க பேசும்போது நானும் அதுல கலந்துக்கனும்னு ஆசையா இருந்துச்சு.. உன்னை பார்த்ததும் ஏதோ இனம் புரியாத இதம் இங்க நான் உணர்ந்தேன் பேபி என்று தன் நெஞ்சை தொட்டுக் காண்பித்தான்..
அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே என் வாழ்க்கை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சேன் பேபி..ஆனால் இனிமே தான் என் வாழ்க்கையே ஆரம்பிக்க போகுதுன்னு நீயும் என் பொண்ணும் சொல்லாம சொன்னீங்க…
என் பழைய வாழ்க்கை நரகம் பேபி அதை பற்றி பேச வேண்டாம்..உன் கூட வாழப் போற வாழ்க்கைதான் நிஜம்..நான் கொஞ்சம் பேராசைக்காரன் பேபி எனக்கு லவ் அதிகமா டன் டன்னா வேணும்..
எனக்கு எல்லாமும்மா நீ வேணும் பேபி..என் கூட கடைசி வரையிலும் இருப்பியா பேபி என்று கண்களில் ஏக்கத்துடன் கேட்டான்..
அவள் அவனிடம் கண்கள் கலங்க "ம்ம்" என்றவள் அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்…
அபி சந்தியாவிற்கு தனக்கு விவாகரத்து ஆனது அனைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்..
தியாவோ மனைவி இறந்து போனதுல ரொம்ப வருத்தத்தில் இருக்கார் என்று நினைத்துக் கொண்டு அவனை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்..
சிறிது நேரத்தில் தன்னை சமன் படுத்திக் கொண்டு சோகம் போய் லவ்வர் அபி வந்துட்டான்..
அப்பொழுதுதான் உணர்ந்தான் தான் இருக்கும் இடத்தை ஐய் என்று உள்ளுக்குள் குதூகலித்தவன் அவள் இடையைத் தன் கைகளால் வலைத்துக் கொண்டு அவள் நெஞ்சில் இன்னும் ஆழப் புதைந்தான்..
(டேய் அபி உன்னை வச்சிக்கிட்டு முடியலைடா..)
அவன் அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவள் தன்னிடம் இருந்து அவனை விலக்கினாள்..அவன் இன்னும் புதைய ஏங்க விடுங்க என்றதும் காது கேட்காதவன் போல் இருந்தான்..
மாமா எனக்கு ஒரு மாதிரி இருக்கு எழுந்திரிங்க என்றதும் பட்டென்று எழுந்தவன் பேபி இன்னொரு தடவை அப்படி கூப்பிடேன் என்று கூறினான்.
அவள் தள்ளியமர்ந்து கொண்டு முடியாதது என்று தலையை ஆட்டினாள்..சரி நீ கூப்பிட வேண்டாம் நானே உன்னை கூப்பிட வைப்பேன்.என்றவன் இப்போ எதுக்கு தள்ளி உட்காருற என்று அவள் உணரும் முன்னரே அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்..
அவன் செயலில் அதிர்ந்தவள் விடுங்க விடுங்க என்று அவனிடம் இருந்து திமிறினாள். பேபி அமைதியா கொஞ்சம் நேரம் இருந்தினா நானே விட்டுடுவேன் இல்லை நான் இப்படிதான் பண்ணுவேன்னு பண்ணினா உன்னை விடவே மாட்டேன்.என்று அவள் காது மடலில் தன் உதடு உரச மீசை முடி குத்த கூறவும் சிலிர்த்தாள்..
அவன் பக்கம் திரும்பி இப்போதானே சோகமா நல்லவங்களா இருந்தீங்க..இப்போ உடனே கெட்டவங்களா மாறிட்டீங்க என்றதும் அவள் தன் செயலுக்கு குடுத்த விளக்கத்தில் சிரித்தவன் ஓ இப்படி எல்லாம் பண்ணினா கெட்டவங்களா…
அப்போ நான் உனக்கு மட்டும் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன் பேபி என்று இன்னும் தன்னுடன் அவளை இறுக்கிக் கொண்டவன் இப்போ இன்னும் கெட்டவனா ஒன்னு செய்யப் போறேன் என்றதும் அதிர்ந்து அவனை திகிலுடன் பார்த்தாள்...
அவர் அதிர்ந்த கண்களை விரித்துப் பார்க்க அந்த கண்களில் முத்தமிட்டவன் அவள் உதட்டைப் பார்த்து தன் விரல்களால் வருடியவன் அவள் கீழுதட்டை இழுத்தவன் பேபி நீ லிப்ஸ்டிக் போடுவியா என்று கேட்டதும் அவன் கையைத் தன் உதட்டில் இருந்து எடுத்தவள் இல்லை அதெல்லாம் போட மாட்டேன்..என்று கூறியவள்..
இலவச இணைப்பு செய்தியாக அவனிடம் குளிர் காலத்துல எனக்கு உதடு வரண்டு போய்டுமா அப்போ மட்டும் லிப் பாம் போடுவேன் என்று கூறியதும் இப்போ குளிர் காலம் இல்லையே பேபி அப்புறம் ஏன் வரண்டு போயிருக்கு என்று அவள் உதட்டை வருடிக் கொடுத்தவன் அங்கிருந்த சாக்லேட்டில் ஒன்றை எடுத்து பிரித்தான்…
அவன் மனசாட்சியோ டேய் சாக்லேட் சாப்டுறேன் என்ற பேரில் அவளுக்கு முத்தம் கொடுத்து இருக்கிற எல்லாத்தையும் உறிஞ்சி எடுத்தா வரண்டு போகாமா என்ன பண்ணும்..என்று அவனை சாடியது.
தியாவோ அதான் ஏன் வரண்டு போச்சுன்னு தெரியலை என்று தன் நாவால் ஈரப் படித்திக் கொண்டு நான் அப்புறம் லிப் பாம் போட்டுக்கிறேன் என்று கூறவும் அவள் எச்சில் ஈரத்தில் மினுங்கிய உதட்டைப் பார்த்தவன் நீ அப்புறம் போட்டுக்கோ இப்போ நான் உனக்கு கோக்கோ லிப் பாம் போட்டுவிடுறேன் என்று கூறினான்..
பாதி உருகிய நிலையில் இருந்த சாக்லேட்டை பிரித்தவன் தன் விரலில் எடுத்து அவள் செர்ரி பழ நிறத்தில் இருந்த உதடுகளில் தடவி கோக்கோ நிறத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தான்..
சாக்லேட் சாப்பிடும் ஆசையில் தன் நாக்கை நீட்டி சுவைப் பார்க்க அதற்கு மேல் அவன் சும்மா இருப்பானா உதடோடு உதடு சேர்த்துக் கவ்விட்டான்…
வாழ்வு சிறக்கும் ….
0 Comments