Advertisement

Ad code

வாழ்வு - 29


 வாழ்வு - 29:


இங்கு தன்னை விடுவிடுவென்று அழைத்து வந்தவளை சந்தியா என்று பரமன் தன்னிடம் சொன்னது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவர் நீ அபியைத் தப்பா நினைச்சுக்காதடா பிள்ளை தங்கமான பையன் என்றதும் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா தாத்தா என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.


இதுல அவரை தப்பா நினைக்க என்ன இருக்கு தாத்தா..அந்த பொண்ணு மேல தான் தப்பு என்றும் எப்படி அவள தன்னவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லுவாள் என்று அவள் ஆத்திரமாக வந்தது. இவர் அவளை எதுக்கு சும்மா விட்டார். அடிச்சுப் பல்லைக் கழட்டிடுருக்கனும் என்று தன் மனதில் லதாவிற்கு வசைமாரிப் பொழிந்துக் கொண்டிருந்தவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.


போடா அபிக்கு இந்நேரம் சொல்லிருப்பாங்க அவன் பதறுவான் என்றதும் அவரே இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை தேடிக்கிட்டு வருவாரு தாத்தா கொஞ்சம் அவர் கிட்ட விளையாண்டு பளிப்போம்.. அவரோட ரியாக்ஷ்ன நான் பார்க்கனும் என்றதும் சிரித்துக் கொண்டு வேறு பேச ஆரம்பித்தனர்..


அபி வீட்டிற்கு வந்து தியாவைத் தேடியவாறே என்னம்மா என்ன ஆச்சு இந்த நேரத்துல எதுக்கு வர சொன்னீங்க என்று கேட்டுக் கொண்டே வந்தவன் தியா.. என்று அழைத்தான். எப்பொழுதும் ஒரு குரலுக்கு ஓடி வரும் தன் பேபியை இன்னும் காணவில்லை என்று யோசித்தவன் எங்கம்மா தியா.. வெளியே போயிருக்காளா என்று கேட்டான்.


அபி என்று தயங்கியவர் பின் லதாக்கும் அந்த பையனுக்கும் டிவோர்ஸ் நடக்கப் போகுதாம் அபி என்று கூறியதும் அதுக்கென்ன ம்மா அவ எப்படியோ போறா நமக்கென்ன என்று அலட்சியமாகக் கேட்டான்.அது இல்லை அபி சந்தியாவும் அதை பார்த்தாள என்று கூறவும் பார்க்கட்டும் அவ பார்த்தா என்ன என்று புருவ முடிச்சுடன் கேட்கவும் சந்தியா கிட்ட லதா பிரசவத்தல இறந்து போயிட்டான்னு தான் அபி சொல்லிருக்கோம் என்றதும் அதிர்ந்தான்.


என்ன ம்மா சொல்றீங்க என்றவன் தன் தாத்தாவை நோக்கி திரும்பியவன் நான் உங்க கிட்ட கேட்டதுக்கு நீங்க எல்லாத்தையும் சொல்லிடீங்கன்னு தானே சொன்னீங்க.. என்று வினவவும் அபி அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு தான் நான் அவங்ககிட்ட மறச்சேன்..


 பின்னாடி லதா ஹர்ஷியைக் கேட்டுக் கோர்ட் கேஸ்னு போய்டுவான்னு பயந்து அவங்க பின் வாங்கக் கூடாதுன்னு தான் அபி நான் அவங்ககிட்ட சொல்லலை.. எனக்கு அப்போ மனசுல இருந்தது எல்லாம் உனக்கு கல்யாணம் ஆகணும் அது ஒன்னு தான் என் மனசுல இருந்துச்சு என்று கூறவும் தாத்தா நான் ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கிட்டதா தானே தியா நினைப்பா என்று பரிதவிப்புடன் கேட்டான்.


சதாக்கும் முன்னாடியே தெரியும் அபி தியா எதும் நினைக்க மாட்டா அவளுக்கு சதா புரிய வச்சிடுவான் நீ போய் கூட்டிட்டு வா என்றதும் பக்கத்து வீட்டிற்கு ஒரு வித பயத்துடனே சென்றான்.


சதாவும் தியாவும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க தான் வந்ததும் அமைதியாகவும் பேபி என்று அவள் அருகில் வந்தவனை கை நீட்டித் தடுத்தவள் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் உங்க ரூமுக்கு போயிட்டுப் பேசலாம் என்று அவனை அழைத்து சென்றாள்.


தாத்தா தருணைப் பார்த்துக்கோங்க நான் பேசிட்டு வந்துடுறேன் என்று அவள் கூறவும் அபிக்கு பீதியானது. இங்கு வீட்டிற்குள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க அவர்களிடம் பேசாமல் விடுவிடுவென்று முன்னால் சென்று விட்டான்.


அவனை தொடர்ந்து கொண்டே அங்கு இருந்தவர்களைப் பார்த்து சிரித்து கண்ணடித்து விட்டு அவன் வேகத்துக்கு ஈடுக் கொடுத்து வேகமாக நடந்தாள்.அங்கிருந்தவர்களுக்கு அப்பொழுதுதான் மூச்சே வந்தது.


அறையில் நுழைந்தவன் அவள் உள்ளே வந்ததும் கதவை சாத்தியவன் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு பேபி உனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சு தான் நான் எதும் சொல்லல..நான் உன்கிட்ட உண்மையை மறைக்கல பேபி தாத்தா சொல்லிட்டத சொன்னாங்க..என்ன விட்டுப் போயிடாத பேபி ப்ளீஸ் நீ இல்லைனா என்னால இருக்க முடியாது என்று தன்னை கட்டிப் பிடித்துக் கொண்டு கூறும் கணவனை கண்டு அவளது மனம் காதலில் உருகியது…


அவனிடம் கொஞ்சம் விளையாண்டுப் பார்க்க நினைத்தவள் அவனை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தவள் ஜன்னலோரம் சென்று நின்றுக் கொண்டு வந்த சிரிப்பைப் படாதப்பாடுப் பட்டு அடக்கினாள்.


அதை தாங்க முடியாதவன் பேபி என்று அவளைப் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டவன் அவள் முதுகில் முகம் புதைத்துக் கொண்டு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினான்..அவன் கூறியது அனைத்தும் சதாசிவம் சற்று முன்பு அவளிடம் கூறியது தான் ஆனால் லதாவிற்கு இருந்த குடிப் பழக்கமும் ஹர்ஷி தனக்கு பிறந்த மகள் இல்லை என்றதும் புதிய விஷயம்.


அவள் தான் பெற்ற மகள் என்றும் பாராமல் விட்டுட்டுப் போயிட்டா.. எப்படியும் எதாவது ஆசிரமத்துல வளருவதற்கு என் மகளா என் கிட்டயே இருக்கட்டும்னு தான் அவக்கிட்ட நானும் ஹர்ஷாவும் போய் பேசினோம்..


பேபி ப்ளீஸ் என்னை விட்டுப் போகாத.. என் மேல உனக்கு கோபமா என்றதும் ஆமா என்கவும் ரௌத்திரம் ஆனவன் ஏய் நான் இவ்ளோ சொல்றேன் புரியாம பேசுற.. புரிஞ்சிக்கோ டி என்று தன் பக்கம் அவளைத் திருப்பினான்.


டிவோர்ஸ் ஆனது தெரிஞ்சா அந்த லதா ஹர்ஷிய கேட்டு கோர்ட்ல கேஸ் போட்டுடுவான்னு நீங்க பின்வாங்க கூடாதுன்னு தான் தாத்தா மறைச்சாராம் என்றதும் யாரு பொண்ண யாரு கேட்கிறது என்று கத்தியவள் அவ என் பொண்ணு நமக்கு ரெண்டு பேருக்கு மட்டும் தான் பொண்ணு எவ வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று ஆக்ரோஷமாகக் கூறியவளை பேபி என்று அழைத்தான்.


என்ன பேபி பேதின்னு இழுத்துட்டு இருக்கீங்க அந்த கேடு கெட்டவ விட்டுட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.. உங்களைப் போல ஒருத்தர் கூட வாழ அவளுக்கு குடுத்து வைக்கல.. இவ வேணான்னு தூக்கிப் போடுறதுக்கும் வேணும்னு எடுத்து மாட்டிக்கிறதுக்கும் இது என்ன சட்டையா..


என்னை மன்னிச்சிட்டியா தியா என் மேல கோபம் இல்லையே என்றதும் அவனை மெத்தையில் அமர வைத்து கீழே மண்டியிட்டவாரு அவனை பார்த்து அமர்ந்தவள் மாமா டிவி ல பார்த்தப்போ அதிர்ச்சியா தான் இருந்துச்சு..


அப்போன்னு பார்த்து தாத்தா வரவும் அவருக்கு தெரிஞ்சா உங்களை எதாவது தப்பா நினைச்சிட்டாருன்னா என்ன பண்றதுன்னு தான் தாத்தாவ அழைச்சிக்கிட்டு அந்த வீட்டுக்குப் போனேன்.அங்க போனதும் தான் தெரியுது தாத்தாக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு அவர் எனக்கு சமாதானம் சொல்றாரு..


அபி நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு கதை சொல்றாரு..பேபி அப்போ என் மேல எதும் கோபம் இல்ல தானே என்று கேட்டதும் நான் ஏற்கனவே இதுக்கு பதில் சொல்லிட்டேன் மாமா..ஆனா உங்க மேல எனக்கு ஒரு விஷயத்துல கோபம் இருக்கு என்றவளைப் பார்த்து என்ன பேபி என்று பாவமாக முகத்தை வைத்துக கொண்டு கேட்டான்.


அவ எப்படி உங்களை ஆண்மை இல்லாதவன்னு சொல்லுவா.. நீங்க அவளை அப்படியே விட்டுருக்கக் கூடாது. போனது போகட்டும் விடுங்க இனிமே என் புருஷனை யாராவது எதாவது சொல்லட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு என்று எழுந்தவளை கையை பிடித்து இழுத்து மெத்தையில் தள்ளியவன் அவள் மீது படர்ந்தான்..


இவள் வாய் சும்மா இருக்காமல் வேண்டுமென்றே மாமா ஹர்ஷி அத்தை கிட்ட இருக்கா நான் போய் பார்த்துட்டு வரேன் என்று அவனை தள்ள.. அதெல்லாம் அவளை அம்மா பார்த்துப்பாங்க நீ என்னை கவனி டி என்றவனை முறைத்தவள் அவன் தாடையைக் கடித்து ஹுக்கும் அதான் நைட் எல்லாம் கவனிச்சுட்டு தானே இருக்கேன்..


அப்படியே ஒன்னும் செய்யாதது போல தான் மேல உருளுவீங்க என்று அலுத்துக் கொண்டவளை என்ன டி ரொம்ப சலிச்சுக்குற என்று அவள் நெஞ்சில் முகம் புதைத்தவன் கொத்து சதையைக் கவ்வ ஆஹ் மாமா..என்று உணர்ச்சிப் பெருக்கில் துடித்தவள் அவனை கட்டி அனைத்துக் கொண்டு அவன் காது மடலைக் கடித்தாள்.


லவ் யூ.. லவ் யூ..லவ் யூ பேபி என்று முத்த மழைப் பொழிந்து முகத்தை ஈரமாக்கியவன் பரபரவென சேலையை அவிழ்த்து இரவிக்கையை உறுவி அவள் உடல் முழுவதும் முத்தம் அர்ச்சனை செய்து தன் பேபி புராணம் பாடிக் கொண்டிருந்தான்…


வாழ்வு சிறக்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments