Advertisement

Ad code

வாழ்வு - 13

 

வாழ்வு - 13:


என்ன மச்சான் கல்யாணக் கலை முகத்துல குத்து டான்ஸ் போடுது போல..என்று கேட்டதும் அப்படியா தெரியுது என்றவனிடம் டேய் மச்சான் எப்பொழுது விறைப்பா இருக்குற நீ இப்போ முகம் பளிச்சின்னுதே அதான் கேட்டேன்..


அவ்ளோ வெட்ட வெளிச்சமாவா தெரியுது அதான் கடையில் எல்லாரும் என்னை அப்படி பார்த்தாங்களா என்று கேட்டவனிடம் ஹிம்ம் பாவம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு போல பித்துப் பிடிக்கிற முதல் ஸ்டேஜ்ல இருக்கன்னு அபி என்று சிரித்துக் கொண்டே கிண்டல் செய்தான்.


அப்பொழுது அபிக்கு போனில் அழைப்பு வரவே எடுத்துப் பார்த்தவனின் முகம் பளிச்சென பிராகாசமாக மின்னியது.. எடுத்துப் பேசியவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.


பேபி என்று ஒட்டுமொத்தக் காதலையும் குத்தகைக்கு எடுத்தவன் போல அழைக்க அவனை அதிசயமாகப் பார்த்தான்.


"ஹ்ம்ம் இப்போ வீட்டுக்கு தான் டா கிளம்புறேன்"


"..."


"ஹிம்ம் சரிடா மெதுவா போறேன்"


"...."


"ஓகே டா வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன்"


"..."


"சரிடா பாய்" என்று போனை அணைத்தவனையே பார்த்து யாருடா அந்த பேபி என்று கேட்டவனிடம் என் தியா பேபி டா என்று கூறியவன் காரில் ஏறு டா பேசலாம் என்றவன் காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான்.


பின் கல்யாண பேச்சு ஆரம்பித்தலிருந்தது முதல் அனைத்தையும் கூறினான். மச்சி முதல்ல தாத்தா கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ ரொம்ப தயங்கினேன்டா..


அப்புறம் ஹர்ஷிக்குட்டிக்கு அம்மாவ வந்தா போதும் என்று சம்மதித்தேன். எல்லோரும் தியாவோட வீட்டுக்குப் போகும் போது கூட வேண்டா வெறுப்பாதான் போனேன் ஆனால் அங்க போய் பார்த்ததும் டோட்டலா எல்லாமே மாறினா மாதிரி இருந்துச்சு..


ஐ லவ் ஹர் டா..சத்தியமா நான் இப்படி இருப்பேன்னு இன்னைக்கு தான்டா எனக்கே தெரிஞ்சிது..இப்போவே அவளை கூட்டிட்டு வந்துருனும்னு தோணுது.


என் கூடவே வச்சுக்கனும்னு தோணுது.. ஹர்ஷியும் அவகிட்ட ஒட்டிக்கிட்டா.. எல்லாத்தையும் தன் பக்கம் இழுக்குற வித்தைய தெரிஞ்சு வச்சுருக்கா டா என்று கூறியவனை பார்த்து ஹிம்ம் கண்டு பிடிச்சிட்டேன் மச்சி கன்பார்மே ஆயிடுச்சி என்றதும் என்னடா என்று கேட்டான்.


ஸ்டார்டிங் ஸ்டேஜ்னு நினைச்சேன் மச்சி..ஆனா இப்போ நீ பேசும்போது தான் தெரிஞ்சிது ஸ்டார்டிங் ஸ்டேஜ் எல்லாம் நீ கடந்துட்ட மச்சி இன்னும் கொஞ்ச நாள் போனா பித்து முத்திப் போய் சட்டையைக் கிழிச்சிக்கிட்டு தான் நிப்ப போல என்று சிரியாமல் நக்கல் அடித்தான்.


அபியின் மனசாட்சியோ சாதா பித்து இல்லை டா சந்தியா பித்து பிடிச்சுருக்குடா ஹர்ஷா…


சோ மச்சி சீக்கிரம் கல்யாணம் வச்சதும் நல்லதுக்கு தான் என்றவனை மொத்து மொத்தென்று மொத்தினான்.


நானும் ஏதோ சீரியஸா சொல்லப் போறேன்னு பார்த்தா என்ன எல்லாரும் ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க போங்கடா என்றவன் வண்டியை ஓட்டினான்.


மச்சி இதெல்லாம் சகஜம் விடுறா விடுறா என்று அவன் தோளைத்தட்டிக் கொடுத்தான்.பின் இருவரும் வீடு வந்ததும் இறங்கி அவரவர் அறைக்கு சென்றனர்.


சந்தியாவிற்கு போன் செய்து வந்து விட்டேன் என்று சொல்லவும் தவறவில்லை..


பரமன் சதா தங்குவதற்காக தங்கள் வீட்டின் பக்கத்திலேயே ஒரு வீடு கிடைக்கவும் அதற்கு வாடகை கொடுத்து விட்டு சதாவிடம் அழைத்துக் கூறினார்.


பின் இந்த பக்கம் சேகர் தன் தங்கையிடம் கால் செய்து குடும்பத்தோடு வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் கல்யாணம் என்று சொல்ல வில்லை..சொல்லி இருந்தால் அவர் கட்டியிருந்த கனவு கோட்டை மொத்தமாக இன்றே சரிந்திருக்கும்.


சர்ப்பிரைஸா இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு சும்மா வந்துட்டுப் போமா என்று கூறி வைத்தார். பின் சந்திரா அனைவரையும் சாப்பிட வருமாறு அழைத்தார்.


அனைவரும் அமர்ந்து சாப்பிட தேவி வர்ஷியை மடியில் வைத்துக் கொண்டு ஊட்டிக் கொண்டிருந்தாள்.அப்பொழுது வந்த ஹர்ஷா தேவியின் அருகில் இருந்த இருக்கையில் எதார்த்தமாக தான் அமர்ந்தான்.


அவன் அமரவும் தேவியிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொண்டவன் நான் ஒன்னுமே பண்ணாதப்போவே இப்படி பண்ற இரு டி உன்னை என்ன பண்றேன்னு பாரு டி என்று தன் மனதிற்குள் கருவியவன்..


அவள் புறமாக திரும்பி ஹர்ஷியைக் கொஞ்சுவது போல் அவள் கைகளை வருடுவதும் டேபிளுக்கு கீழே தன் கால்களால் அவள் கால்களை கீழிருந்து மேலாக வருடி அவளை ஒரு வழி செய்தான்.


அவள் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தது அவனுக்கு மிகவும் வசதியாகிப் போனது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


தன் அத்தை படும் பாட்டை ஹர்ஷி புரிந்து கொண்டாளோ என்னவோ ஹர்ஷாவை நோக்கி தன் கையை நீட்டினாள்..அவளை தேவியிடம் இருந்து தூக்குறேன் பேர்வழி என்று அழுத்தமாக அவளை வருடி விதிர்க்கச் செய்தான்.


அதற்கு மேல் அவளுக்கு சாப்பாடு இறங்கவே இல்லை.. ஏனோ தானோவென்று சாப்பாட்டைக் கொரித்தவள் உடனே எழுந்து கொண்டாள். பின் அனைவரும் சாப்பிட்டதும் அவரவர் அறைக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.


இங்கு தன் அறைக்கு வந்த அபி ஹர்ஷியைத் தூங்க வைக்கப் படாதப் பாடு பட்டுக் கொண்டிருந்தான். இன்றுதான் வர்ஷி ரொம்ப ஆக்டிவ்வா இருந்தாள்.. ஹர்ஷிக் குட்டி தூங்குடா.. செல்லக்குட்டி தானே அப்பா செல்லம் தானே நீங்க தூங்குங்கடா என்று அவளைத் தூங்க வைக்க செஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அவன் மனசாட்சியோ டேய் அபி நீ எதுக்கு ஹர்ஷியை இவ்ளோ சீக்கிரம் தூங்க வைக்கிறேன் எனக்கு தெரியும்.. கேடி டா நீ உன் பேபி கூட போன்ல கொஞ்சிக் குலாவ தானே தூங்க வைக்கிற.. என்று கேலி செய்தது.


ஏய் நானே ஹர்ஷி தூங்க மாட்டுறான்னு கடுப்புல இருக்கேன் ஓடிடு..என்று கூறியவன் ஹர்ஷியிடம் குட்டி மா தூங்குடா என் பட்டுல்ல செல்லம் தங்கம் என்று விதவிதமாக கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அவன் இப்பொழுது போன் செய்தாலும் ஹர்ஷியும் தியாவும் மட்டும் பேசுவார்கள்.. தான் பேச முடியாது என்ற கவலை அவனுக்கு…


அதனால் ஹர்ஷியைத் தூங்க வைத்து விட்டு பேசலாம் என்று தூங்க வைக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தான்.


இங்கு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றதும் தன் அறைக்கு செல்வது போல உள்ளே சென்று தேவி தண்ணீர் எடுக்க சமயலறைக்கு வருவதைப் பார்த்து பதுங்கியிருந்த பூனை அவளைக் கண்டதும் பாய்ந்து தன் கைகளில் அள்ளிக் கொண்டது.


பயத்தில் கத்தப் போனவளைத் தன் இதழ் கொண்டு அடக்கியவன் அப்படியே தன் அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றான். மெத்தையில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடியில் இருத்திக் கொண்டவன் அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் அப்பொழுது தான் அவளை விட்டான்.


அவன் விட்டதும் தான் தாமதம் அவனிடம் இருந்து விடுப்பட முயன்று கொண்டிருந்தாள் அவளால் முயல மட்டுமே முடிந்தது. ஏய் ஜாங்கிரி இதுக்கு மேலே அசையாத நானே என்னை கட்டுப் படுத்திட்டு இருக்கேன்..என்றதும் அவன் நெஞ்சில் கை வைத்து பலமாக தள்ளினாள்.


இவ சரிப்பட்டு வர மாட்டா உன்னை என்றவன் அவளை மெத்தையில் தூக்கிப் போட்டு அவள் மேல் படர்ந்தான்.அவள் வழுவழுப்பான கன்னத்தை கடித்தவன் நானும் எவ்ளோ நாள் டி வெய்ட் பண்றது.எதுக்கு இவ்ளோ அடம் பண்ணுற உனக்கு என்ன தான் டி பிரச்சனை என்று கேட்டவனிடம் எதும் சொல்லாமல் அவன் கடித்த கன்னத்தை அழுத்தித் தேய்த்தாள்.


அதில் வெறியானவன் அவள் முகம் முழுக்க கடித்து முத்தமிட்டான்..அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டு அவளைத் தன் மீசையால் குறுகுறுக்கச் செய்தான்.


அவன் இம்சையை அதற்கு மேல் தாங்க முடியாமல் மாமா ப்ளீஸ் விடுங்க மாமா எனக்கு கூசுது என்று கூறினாள்.அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்றேன்னு சொல்லு உன்னை விடுறேன் என்றதும் ஹிம்ம் முதல்ல எழுந்திரிங்க மாமா நீங்க வெயிட்டா இருக்கீங்க...திக்கி திணறி கூறியதும் தான் எழுந்தான்.


அவளை நகர விடாமல் தன்னோடு சேர்த்து அனைத்தவன் சொல்லு உனக்கு என்ன பிரச்சனை அதுக்கு என்னை அவாய்ட் பண்ற என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.


இங்கு இப்படி என்றால் அங்கு ஒரு ஆசாமி போனில் முத்தம் கொடுத்தே போனை சூடாக்கி மூடாக்கி அது சார்ஜ் தீர்ந்து போகும் அளவுக்கு பேசி அவன் போன் சார்ஜை முழுதும் தீர்த்தப் பிறகே போனை வைத்தான்.


போனுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் எனக்கு பார்ட்னரை செட் பண்ணிக் குடுத்துட்டு நீ என்ன வேணும்னாலும் பண்ணுடு என்று கதறியிருக்கும்..


வாழ்வு சிறக்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments